×

போலீசார் ரோந்து வந்ததால் கொள்ளையடித்த ரூ.6 லட்சத்தை சாலையில் வீசிச்சென்ற ஆசாமி

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 2வது சிப்காட்டில் ஒரு தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த 25ம் தேதி இரவு மர்ம ஆசாமி  உள்ளே புகுந்து, பீரோவில் இருந்து ரூ.6.41 லட்சம் பணத்தை கொள்ளையடித்து கொண்டு நிறுவனத்தில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது, அவ்வழியே ஓசூர் அட்கோ போலீசார் ரோந்து சென்றனர். போலீசாரை கண்டதும், பயத்தில் அந்த நபர் கையில் வைத்திருந்த பணத்தை அங்கேயே வீசிவிட்டு ஓடிவிட்டார்.

சாலையோரத்தில் கிடந்த பணத்தை அந்நிறுவனத்தில் பணிபுரியும் திருப்பதி நகரை சேர்ந்த பிசன்னா (36) என்பவர் மீட்டு நிறுவனத்தில் ஒப்படைத்தார். அப்போது, நிறுவனத்தின் உரிமையாளர் அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது, அதில் ஒரு கொள்ளையனின் உருவம் பதிவாகியிருந்தது. அவர் பணம் கொள்ளையடித்ததும், போலீசாரை பார்த்ததால் பணத்தை வீசிச்சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Assamese ,police patrols ,road , Robbery
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி