×

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை : துப்பாக்கிச் சூட்டில் போலீசார் ஒருவர் படுகாயம்

ஸ்ரீநகர் : ஜம்மு- காஷ்மீர் மாநிலம் நக்ரோட்டாவில் 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் உள்ள டோல் கேட்டில் போலீசாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று காலை துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. இதில் போலீசார் ஒருவர் காயமடைந்துள்ளார்.

*ஜம்முவின் நக்ரோட்டா பகுதியில் உள்ள ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் டிரக் ஒன்றில்  3-4 பயங்கரவாதிகள் ஸ்ரீநகர் நோக்கி பயணம் மேற்கொண்டு இருந்தனர்.

*அப்போது நெடுஞ்சாலையில் உள்ள டோல் கேட் ஒன்றில் பணியில் ஈடுப்பட்டு இருந்த போலீசார், ட்ரக்கை வழிமறித்து, அதனை சோதனை செய்ய முயற்சித்துள்ளனர்.

*போலீசாரை கண்டு அதிர்ச்சி அடைந்த தீவிரவாதிகள், கண்மூடித்தனமாக போலீசார்களை குறிவைத்து துப்பாக்கியால் சுடத் தொடங்கியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டினால் போலீசார் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். படுகாயம் அடைந்த போலீசாருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

*இதையடுத்து தீவிரவாதிகளுக்கு தக்க  பதிலடி கொடுக்கும் விதமாக போலீசார் நடத்திய என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் சூட்டுக கொல்லப்பட்டனர்.

*எஞ்சிய தீவிரவாதிகள் அருகில் இருந்த வனப்பகுதிக்குள் பதுங்கி உள்ளனர். இதனால் வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை சுமார் 5 மணிக்கு நடந்துள்ளது.

*இந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் மாநில டிஜிபி தில்பாக் சிங், சுட்டுக் கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளும் ஹிராநகர் எல்லையான கத்துவாவிலிருந்து அவர்கள் ஊடுருவியதாக சந்தேகிக்கப்படுவதாக கூறினார்.

*இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நக்ரோட்டாவில் உள்ள பள்ளிகளை மூட அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.


Tags : militants ,security forces ,policeman ,highway ,Jammu ,Srinagar ,policemen , Jammu and Kashmir, Nakrota, militants, security forces, toll gate, Jammu-Srinagar, highway, shot dead
× RELATED வாலிபர் கைது ரயில்வே பாதுகாப்பு படையினர் போலீசார் கொடி அணிவகுப்பு