×

தேர்வாணைய மோசடி ஆட்சி அதிகாரத்தில் ஊழல் பரவி விட்டது : கமல்ஹாசன் தாக்கு

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேற்று தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள கருத்துகள் வருமாறு:
ஆட்சி அதிகாரத்தின் உயர் மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரை ஊழல் பரவி இருப்பதை இந்த ‘‘தேர்வாணைய மோசடி’’ பறைசாற்றுகிறது. மேலும்,  கீழுமாய் புரையோடியிருக்கும் ஊழலுக்கு நடுவிலே, நெஞ்சுரத்தோடு  நேர்மையைக்  கடைப்பிடிக்கும் மிகச் சிலருக்கு... நம்பிக்கையை விடாதீர்கள். நாளை நமதே.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தமிழுக்கு உரிய மரியாதை கொடுக்க முடிவெடுத்து இருப்பதை மெச்சினோம். மக்களுக்குப் புரியும் எந்த மொழியும், சர்வ வல்லமையுமுள்ள கடவுளுக்கும் புரிந்தே  ஆக வேண்டும். அரசு மருத்துவமனையில் 2 வாரங்களில் 2 உயிர்கள் பலி என்பது தமிழக அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணி. அலட்சியத்தால் நிகழும் ஒவ்வொரு மரணமும் கொலைதான். பிற மாநிலங்களின் அரசு மருத்துவமனை பயங்கரங்கள் நமது தமிழ்நாட்டில்  நடப்பதற்கு முன் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

Tags : Terror ,Kamal Haasan ,junta ,attack , Terror scandal spreads , junta, Kamal Haasan attack
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...