×

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்விலும் 200 பேர் தேர்வு எழுத தடை?

சென்னை:2017ம் ஆண்டு நடந்த பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு எழுதியவர்களில் முதல் 2,000 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அதில் 200 பேர் 50 முதல் 100 மதிப்பெண் வரை முறைகேடாக பெற்றது கண்டறியப்பட்டது. குறிப்பிட்ட தேர்வு ரத்து செய்யப்பட்டுவிட்டது. மறுதேர்வு நடத்துவதற்காக இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறிப்பிட்ட மறுதேர்வுக்கு ஜனவரி 22ம் தேதி முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மே 2, 3ம் தேதிகளில் இந்த தேர்வு நடக்கிறது. இந்த மறுதேர்வுக்கு ஏற்கனவே தேர்வு எழுதியவர்களில் 900 பேர் தவிர மற்றவர்கள் தங்களின் ஆவணங்களை பதிவேற்றம் செய்துள்ளனர். விரைவில் அனைவரும் ஆவணங்களை பதிவேற்றம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட மறு தேர்வுக்கு, முறைகேடு செய்ததாக கண்டறியப்பட்ட 200 பேர் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. அதற்கான பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : College Lecturer Exam , 200 students banned ,polytechnic college lecturer exam
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...