×

நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற மது விருந்தில் நடனமாடியவர் திடீரென மயங்கி விழுந்து பலி: திருமண நிகழ்ச்சியில் சோகம்

சென்னை: எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மது போதையில் நண்பர்களுடன் நடனமாடிய சிங்கப்பூரை சேர்ந்த நபர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். சென்னை ஏழுகிணறு வீராசாமி தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (53). இவர், பணி காரணமாக தற்போது தனது குடும்பத்துடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இந்நிலையில், உறவினர் இல்ல திருமணத்திற்காக சுரேஷ் கடந்த 28ம் தேதி சென்னை வந்தார். பின்னர் எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  அதை தொடர்ந்து நடைபெற்ற மது விருந்தில், சுரேஷ் தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி வரை போதையில் உற்சாகமாக நடனமாடி உள்ளார்.

அப்போது திடீரென சுரேஷ் மயங்கி விழுந்தார். இதை பார்த்த அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவசர அவசரமாக அவரை மீட்டு ஆயிரம் விளக்கு பகுதியில்  உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதித்தனர். அங்கு சுரேஷை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதை கேட்டு திருமணத்திற்கு வந்த அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இதுகுறித்து பட்டினப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : party ,hotel ,Tragedy ,Star Hotel ,wedding ceremony , Star hotel, wine party, falling victim, wedding ceremony
× RELATED பெண் பயணிகளை ஏற்றாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!!