×

வி.ஏ.ஓ.வை மிரட்டிய வருவாய் ஆய்வாளர் சஸ்பெண்ட்

திருப்பூர்: திருப்பூரில், கலெக்டர் பெயரை பயன்படுத்தி மண் கடத்தல் லாரியை விடுவிக்க கூறி வி.ஏ.ஓ.வை மிரட்டிய வருவாய் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காட்டூர் கிராமத்தில் அனுமதியின்றி மண் கடத்திய லாரியை கடந்த 24ம் அப்பகுதியை சேர்ந்த வி.ஏ.ஓ. கார்த்திகேயன் பிடித்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வி.ஏ.ஓ கார்த்திகேயனை பொங்கலூர் வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரி தொலைபேசியில் அழைத்து லாரியை விடுவிக்கும்படி கூறி மிரட்டியுள்ளார்.

இந்த மிரட்டல் ஆடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. அதில் மணல் கடத்தல்காரர்கள் தாசில்தார் முதல் கலெக்டர் வரை பார்க்கிறார்கள் என வருவாய் ஆய்வாளர் பேசி இருந்தார். இதுகுறித்து, மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். மேலும் வருவாய் ஆய்வாளரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை மேற்கொண்டார். கிராம நிர்வாக அலுவலரிடம் ஆர்.டி.ஓ. கவிதா விசாரணை நடத்தினார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Tags : Revenue Analyst , VAO, intimidator, revenue analyst, suspended
× RELATED பைக் மீது மினி பஸ் மோதி வருவாய் ஆய்வாளர் பலி