சென்னை: பிப்ரவரி 8-ம் தேதி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. பக்தர்களின் வசதிக்காக பிப்ரவரி 7ம் தேதி அதிநவீன சொகுசு மிதவை பேருந்துகள் பழனிக்கு இயங்கும். தைப்பூச திருவிழா முடித்த பின்னர் பழனியில் இருந்து பிப்ரவரி 8 ம் தேதி சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.