×

பல்லடத்தில் இருந்து பிச்சை எடுப்பதற்காக குழந்தை கடத்திய பெண் கைது

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்தவர் சுடலை ராஜா. இவருடைய இரண்டரை வயது குழந்தை மகாலட்சுமியை கடந்த 24ம்  தேதி பெண் ஒருவர் கடந்தி சென்றதாக பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குழந்தை கடத்திய பெண்ணை பிடிக்க இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன், எஸ்.ஐ. விஜயகுமார்  ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் குழந்தையையும், அந்த பெண்ணையும் தேடி வந்தனர். அப்போது  தனிப்படைக்கு குழந்தையை கடத்திய பெண் ஈரோட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் அங்கு குழந்தை மகாலட்சுமியுடன் இருந்த பெண்ணை பிடித்தனர். விசாரணையில் அந்த  பெண் சேலத்தை சேர்ந்த மல்லிகா (எ) அல்போன்ஸ்மேரி (24) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது குழந்தை  கடத்தல் பிரிவு வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இது குறித்து  திருப்பூர் மாவட்ட எஸ்பி. திஷா மித்தல் கூறியதாவது: பல்லடத்தில் குழந்தை கடத்தப்பட்டது என தகவல் தெரியவந்ததும் உடனடியாக பல்லடம்  டி.எஸ்பி. முருகவேல் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து தேடினோம்.  ஈரோட்டில் அவர் சிக்கினார். இவ்வாறு அவர் கூறினார். கைதான பெண்  மல்லிகாவிடம் குழந்தையை கடத்தியது ஏன்? என போலீசார் விசாரணை நடத்தினர். அப்ேபாது குழந்தையை கடத்திச்சென்று பிச்சை எடுக்க  திட்டமிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.



Tags : Palladam ,Palladium Woman , Palladium, Woman kidnapped , begging
× RELATED பல்லடம் பெரியாயிபட்டி கிராமத்தில்...