நாசிக்: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே அரசு பஸ்சும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி கிணற்றில் கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. இந்த கோர விபத்தில் காயமடைந்த 32 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.