×

தொழிலாளர்கள் நலவாரிய தேர்வுகள் திடீர் ரத்து

சென்னை: தொழிலாளர்கள் நல வாரியத்தில் காலியாக உள்ள கணினி இயக்குபவர் மற்றும் இளநிலை உதவியாளர் பதவிகளுக்கான தேர்வுகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் காலியாக உள்ள கணினி இயக்குபவர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக, 17.10.2018 அன்று இணையதளம் மற்றும் நாளிதழ்களில் அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு 17.11.2019, 30.11.2019 மற்றும் 1.12.2019 அன்று தேர்வுகள் தமிழகம் முழுவதும் நடந்தன. இதை தொடர்ந்து 18.1.2020 மற்றும் 20.1.2020  அன்று நேர்முகத் தேர்வு சென்னையில் நடந்தது. தற்போது, மேற்காணும் எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது. தேர்வு நடத்தும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


Tags : cancellation , Workers, welfare choices, abrupt, cancellations
× RELATED ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது...