மதுரை: ஆகம விதி என்பதே தமிழ் வார்த்தை தான், அதற்கு கல்வெட்டு மற்றும் ஓலைச் சுவடி ஆதாரங்கள் உள்ளது என்று தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த கோரும் வழக்கில் மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் வாதாடி வருகின்றனர். தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் குடமுழுக்கு நடத்தப்படும் என அரசு வழக்கறிஞர் வாதாடினார்.