சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி வளாகத்தின் முன்பு 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து 3-வது நாளாக மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.