சென்னை: சமத்துவ மக்கள் கட்சியில் புதிய மாவட்ட தலைவர்களை நியமித்து சரத்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து, சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்காசி தனி மாவட்டமாக உதயமாகியுள்ளது. இதனால், சமத்துவ மக்கள் கட்சியின் தென்மண்டல நிர்வாக கட்டமைப்பு மறு சீரமைக்கப்பட்டு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, நெல்லை புறநகர் மாவட்டச் செயலாளராக செங்குளம் கணேசன், நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளராக ராஜேஷ், தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளராக தங்கராஜ், தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளராக சின்னசாமி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக லலீத்குமார், கோவை மாநகர் தெற்கு மாவட்டச் செயலாளராக முத்துராஜ் ஆகியோரும் இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டச் செயலாளர்களுக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.