- வீடுகள்
- கபில் மிஸ்ரா
- அனுராக் தாக்கூர் அப்போ
- பர்வேஷ் வர்மா இப்போது
- பெண்கள்
- பாஜா எம்.பி.
- பீதி
- பெண்களைக் கொல்வது: பாஜா எம்.பி.
புதுடெல்லி: டெல்லி தேர்தல்
பிரசாரத்தில் பாஜ தலைவர்கள் அடுத்தடுத்து சரச்சை கிளப்பி வரும் நிலையில்,
இப்போது மீண்டும் பாஜ எம்.பி. ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளார். டெல்லி தேர்தல் பிரசாரத்தில் சர்ச்சை ஒன்றையே தங்களது
இலக்காக கொண்டு செயல்படுவதுபோல் பாஜ தலைவர்கள் தலைவர்கள் களம் இறங்கி
உள்ளனர். ஏற்கனவே, கபில்மிஸ்ரா, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர்
இதுபோன்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்நிலையில், பாஜ எம்.பி., பர்வேஷ் வர்மா அடுத்த சர்ச்சையை
கிளப்பியுள்ளார்.
தேர்தல் பிரசாரத்தில் பேசிய வர்மா, “காஷ்மீரில்,
அங்குள்ள காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு என்ன நடந்ததோ, அது டெல்லியிலும்
நடக்கும். ஷாகீன்பாக்கில் லட்சக்கணக்கானோர் கூடியுள்ளனர். அவர்கள் உங்கள்
வீடுகளுக்குள் புகுந்து உங்களது மகள்களையும், சகோதரிகளையும் பலாத்காரம்
செய்து கொலையும் செய்துவிடுவார்கள். எனவே, டெல்லி மக்கள் முடிவெடுக்க
வேண்டிய நேரம் இது. வரும் தேர்தலில் பாஜ வெற்றி பெற்றால், 11ம் தேதி இரவே
ஷாகீன் பாக் இடம் காலி செய்யப்படும். அங்குள்ளவர்கள்
அப்புறப்படுத்தப்படுவார்கள்’’ என்று கூறினார். ஷாகீன்பாக் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்ட மதப்பிரிவினர். அவர்களுக்கு எதிராக பாஜ
தலைவர்கள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகின்றனர். மக்களிடையே
பீதியை கிளப்பும் அவரது இந் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.