×

கூடுதல் இழப்பீடு கோரிய போபால் விஷவாயு வழக்கு நீதிபதி திடீர் விலகல்

புதுடெல்லி: மத்திய பிரதேசத்தின் போபாலில், அமெரிக்காவை சேர்ந்த ‘யூனியன் கார்பைட்’ நிறுவன தொழிற்சலையில் 1984ல் ஏற்பட்ட விஷவாயு கசிவால் 3,000 பேர் பலியாகினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.715 கோடி இழப்பீட்டை, யூனியன் கார்பைட் நிறுவனம் வழங்கியது. பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட காலமாக, பல்வேறு உடல் உபாதைகளால் போராடி வருவதால், அவர்களின் மருத்துவ செலவுக்கு கூடுதலாக ரூ.7,844 கோடி இழப்பீடு வழங்க அமெரிக்க நிறுவனத்துக்கு உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.

இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நேற்று தொடங்க இருந்தது. இந்நிலையில், இந்த அமர்வில் இடம் பெற்றுள்ள நீதிபதி ரவிந்திர பட், தன்னை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். ஏற்கனவே போபால் விஷவாயு விவகாரத்தில் சீராய்வு மனு விசாரணையின் போது, தான் மத்திய அரசு தரப்பு வக்கீலாக ஆஜரானதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால், வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படாது என்றும், தலைமை நீதிபதியின் மறுஉத்தரவுக்காக காத்திருப்பதாக உத்தரவிட்ட நீதிபதி அருண் மிஸ்ரா, விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார். இந்த அமர்வில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, வினீத் சரண், எம்.ஆர்.ஷா ஆகியோரும் உள்ளனர்.

Tags : resignation ,gas court judge ,Bhopal , Additional Compensation, Bhopal Poisoning, Case, Judge, Dissolution
× RELATED கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 2 இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு!