×

வடசென்னை அனல் மின்நிலைய நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சென்னை: வடசென்னை அனல் மின்நிலைய நிர்வாகம் செய்த பணிக்கு உரிய பணம் வழங்காததை கண்டித்து, ஒப்பந்ததாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அருகே அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் 5 அலகுகளில் நிலக்கரி எரியூட்டப்பட்டு 1830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு 1200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிரந்தர பணியாளர்களாகவும், 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையிலும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இங்கு பணிகளை முடித்து 9 மாதங்களாகியும் அவர்களுக்கு உரிய பணம் வழங்கப்படாததை கண்டித்து ஒப்பந்ததாரர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது பணிகளை முடித்து முறையான ரசீது உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் வழங்கிய நிலையில் 9 மாதங்களாகியும் அதற்குரிய பணத்தை வழங்காமல் அனல்மின் நிலைய நிர்வாகம் அலட்சியம் செய்வதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.

Tags : Demonstration ,North Central Power Plant , North Central, Power Plant, Administration, Condemnation, Demonstration
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்