×

அறநிலையத்துறை அலுவலக அறைக்குள் மக்கள் செல்போன் கொண்டு செல்ல தடை

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சென்னை மண்டல இணை ஆணையர் அலுவலகம் உள்ளது. இணை ஆணையராக ஹரிப்பிரியா பொறுப்பு வகித்து வருகிறார். இவரை திங்கட்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்கள் பார்க்கலாம். அவ்வாறு சந்திக்க வரும் பொதுமக்களிடம் இணை ஆணையர் அறைக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இணை ஆணையர் அலுவலக வளாகத்தில் நோட்டீசும் ஒட்டப்பட்டுள்ளது. அதில், இணை ஆணையரை சந்திக்க வரும் பொதுமக்கள் தங்களது கைப்பேசியை சுவிட்ச் ஆப் செய்து வெளியில் உள்ள அலுவலக உதவியாளரிடம் கைப்பேசியை கொடுத்து அதற்குரிய டோக்கனை  பெற்றுக்கொண்டு பின்னர் உள்ளே செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கண்டிப்பாக கைப்பேசி தவிர்க்கப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : office room , Department of Justice, Office Room, People
× RELATED சி.இ.ஓ அலுவலக அறை முன்பாக இடைநிலை ஆசிரியர்கள் தரையில் அமர்ந்து தர்ணா