×

மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்த நிர்பயா குற்றவாளி முகேஷ்: பதிவாளரிடம் முறையிட நீதிபதி உத்தரவு

புதுடெல்லி: கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு நிர்பயா குற்றவாளி முகேஷ் குமார் சார்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. 2012ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் குற்றவாளிகள் 4 பேரும் மாறி மாறி சீராய்வு மனு, கருணை மனு ஆகியவற்றை தாக்கல் செய்து வந்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் அனைத்து நீதிமன்றம் மற்றும் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு விட்டது. ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்டு விட்டதால் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதி என்ற நிலை உருவாகி உள்ளது.

இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் குமார் என்பவன், ஜனாதிபதி தனது கருணை மனுவை நிராகரித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளான். அதுமட்டுமல்லாது, முகேஷ் குமார் சார்பில் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி இன்று உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அந்த முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, ஒருவர் தூக்கிலிடப்பட உள்ளார் என்றால், அதை விட அவசர வழக்கு வேறு எதுவும் இல்லை. தூக்கிலிடப்படும் குற்றவாளிகளின் மனுக்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். எனவே வழக்கை பட்டியலிடுவது தொடர்பாக பதிவாளரிடம் சென்று முறையிடுமாறு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியுள்ளார்.


Tags : Mukesh ,SC , Nirbhaya case, Mukesh, Supreme Court, mercy petition
× RELATED சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர்...