×

மத்திய பிரதேசம் - மகாராஷ்டிரா எல்லையில் இளைஞர் ஒருவரை புலி தாக்கும் வீடியோ வைரல்

மும்பை: மத்திய பிரதேசம் - மகாராஷ்டிரா எல்லையில் உள்ள கைர்லாஞ்சி பகுதியில் உள்ள வயல்வெளிக்குள் கடந்த சனிக்கிழமை திடீரென புலி ஒன்று புகுந்தது. அப்போது அங்கு நின்றுக் கொண்டிருந்த ஒருவரை சுற்றிவளைத்த புலி அவரைத் தாக்க முற்பட்டது. புலியிடம் சிக்கிக் கொண்ட நபர், மிக சாமர்த்தியமாக தரையோடு தரையாக அசையாமல் அப்படியே படுத்து விட்டார். நபர் அசைவற்று இருந்ததால் புலி அவர் அருகே அமர்ந்து காத்து கொண்டிருந்தது. அதனைக் கண்ட பொதுமக்கள் ஒன்றாகக் கூடி கூச்சலிடத் தொடங்கினர்.

பொதுமக்களிடம் இருந்து வந்த சத்தத்தை கேட்ட புலி, செய்வது அறியாமல் அப்படியே சற்று நேரம் அமர்ந்திருந்தது. தொடர்ந்து கூட்டத்தினர் அருகே வருவதை அறிந்த அந்தப் புலி, அந்த வயல்வெளியை கடந்து  தெறித்தோடியது. அதன்பின் சிக்கிக் கொண்ட அந்த நபர் எழுந்து மிக இயல்பாக நடந்து செல்கிறார். இந்தக் காட்சியை கூடியிருந்த கூட்டத்தினர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அதனை பர்வீன் கஸ்வான் என வனத்துறை அதிகாரி ட்விட்டரில் பதிவேற்றி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Tags : Tiger attack ,Madhya Pradesh ,border ,Maharashtra ,tiger , Madhya Pradesh - Maharashtra, border, young man , attacked , tiger , viral video
× RELATED மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள...