×

மக்களை எளிதில் தொடர்பு கொள்ள மொபைல் ஆப்பை வெளியிட்டுள்ளார் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார்

விழுப்புரம்:  மக்களை இணைக்கும் புள்ளியாக இருந்து வரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களின் பிரச்சனையை தீர்க்கும் முயற்சியை கையில் எடுத்துள்ளார் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் எம்.பி. ரவிக்குமார்.   விறல்நுனியில் தொழில்நுட்பம் உள்ள இந்த காலகட்டத்தில் மக்களை எளிதில் தொடர்பு கொள்ளும் நோக்கத்தில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் எம்.பி. ரவிக்குமார் பொபையில் செயலி ஒன்றை வெளியிட்டுள்ளார். டாக்டர்.எம்.பி.ரவிக்குமார் என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலியின் தொடக்க நிகழிச்சி விழுப்புரத்தில் நடைபெற்றது. விழுப்புரம் ஜி.எல்.யூ.ஜி  என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த செயலியை வடிவமைத்துள்ளது.

இதன் மூலம் 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி மக்கள் தங்களின் பிரச்சனைகள், கோரிக்கைகள் ஆகியவற்றை இதன் மூலம் தெரிவிக்க முடியும்.  மக்கள் பிரதிநிதிகளுக்கு இதுபோன்ற செயலியை வடிவமைத்து கொடுக்க தயாராக இருப்பதாக ஜி.எல்.யூ.ஜி  நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த செயலியில் எம்.பி.ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் பேசிய வீடியோக்கள், அதிகாரிகளிடம் கொடுத்த கோரிக்கை மனுக்கள் குறித்த விவரங்கள், பங்குபெறும் கூட்டங்கள் ஆகிய தகவல்களும் பதிவேற்றம் செய்யப்படும். தமிழகத்தில் முதல்முறையாக மக்களின் குறைகளை தெரிந்து கொள்வதற்காக இம்மாதிரியான செயலி வடிவமைத்து வெளியிடப்பட்டுள்ளது.


Tags : Ravi kumar ,Villupuram MP , People, Mobile App, Villupuram, MP Ravi kumar
× RELATED மக்களவை தேர்தல் முன்னேற்பாடு சிவகிரி தாலுகாவில் ஆய்வுக்கூட்டம்