×

பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசிய கருத்துக்களை தவிர்த்திருக்கலாம்: பாமக நிறுவனர் ராமதாஸ்

மதுரை: பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசிய கருத்துக்களை தவிர்த்திருக்கலாம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். பெரியார் - ரஜினி சர்ச்சை பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், “நடிகர் ரஜினிகாந்த் எப்பொழுதும் நிருபர்கள் கேட்கும் கேள்விக்கு உரிய பதிலை அளிக்க மாட்டார. மழுப்பலாக பேசிவிடுவார். ஆனால், சில கருத்துகளை திட்டமிட்டு பேசுகிறார். பெரியார் குறித்து அவர் பேசிய கருத்துக்களை தவிர்த்திருக்கலாம். தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள், அவரை அவமதிப்பு செய்பவர்கள் காட்டுமிராண்டிகள், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

Tags : Ramadas ,Periyar ,Rajinikanth ,Bhamaka ,founder , Periyar, Rajinikanth, Bamaka, Ramadas
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...