சென்னை: நாட்டின் குடியரசுத் தினத்தை மெரினாவில் உள்ள காந்தி சிலை அருகே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக்கொடியை ஏற்றினார். ஆளுநர் கொடியேற்றிய விழாவில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. கொடியேற்றத்தை தொடர்ந்து முப்படை அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்கிறார்.