×

கிரானைட் ஏற்றிச்சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

திருவொற்றியூர்: கிரானைட் கற்களை ஏற்றிச்சென்ற கன்டெய்னர் லாரி, 10 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது. இதில், டிரைவர் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.  திருவொற்றியூரில் மத்திய அரசுக்கு சொந்தமான கான்கார் கன்டெய்னர் முனையம் உள்ளது. இங்கிருந்து, 30 டன் எடையுள்ள கிரானைட் கற்களை ஏற்றிக் கொண்டு, 20 அடி நீள கன்டெய்னர் லாரி   நேற்று முன்தினம் இரவு,  எண்ணூர் துறைமுகம் நோக்கி சென்றது. கார்கில் நகர் அருகே பக்கிங்காம் கால்வாய் சாலையோரம், வளைவில் திரும்பும் போது, திடீரென லாரி நிலை தடுமாறி, 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது சுக்குநூறானது. இதில், சிக்கிய லாரி  ஓட்டுனர் பிரபாகரன் (30) என்பவரை    அருகில் இருந்தவர்கள் மீட்டு, திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Accident ,truck Accident , Accident , granite-loaded truck
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...