களியக்காவிளை: எஸ்எஸ்ஐ வில்சன் மீது துப்பாக்கி சூடு நடத்திய களியக்காவிளை சோதனை சாவடியில் தீவிரவாதிகள் அப்துல்சமீம், தவுபிக் ஆகியோரை அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வில்சனை சுட்டுக்கொன்றது எப்படி என்பதை தவுபிக் நடித்து காட்டினார். களியக்காவிளை போலீஸ் சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன்(57) கடந்த 8ம் தேதி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். இதுதொடர்பாக அப்துல் சமீம், தவுபிக் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது உபா சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இவர்களை 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் எர்ணாகுளத்தில் உள்ள கேஎஸ்ஆர்டிசி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கழிவுநீர் ஓடையில் துப்பாக்கி, 5 தோட்டாக்கள் மீட்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் திருவனந்தபுரம் தம்பானூர் பஸ் ஸ்டாண்ட் அருகே கத்தி கைப்பற்றப்பட்டது.
இந்தநிலையில் நேற்று களியக்காவிளையில் உள்ள சோதனை சாவடியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட பகுதியில் அப்துல் சமீம், தவுபிக் ஆகியோரை நேரில் அழைத்து சென்று டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது எந்த பகுதியில் இருந்து சோதனை சாவடிக்கு வந்து துப்பாக்கியால் சுட்டடார்கள், பின்னர் எப்படி தப்பிச்சென்றார்கள் என்பது போன்றவற்றை இருவரும் நடித்துக்காட்டினர். இவர்களில், வில்சனை தவ்பிக் சுட்டுக் கொன்றதாக தெரிவித்தார்.
Tags : checkpoint ,Militants ,SSI ,Wilson , Militants investigate in Kaliyakkavili checkpoint where SSI shot Wilson: Acting with police