×

டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்து 5 பேர் பரிதாப பலி

புதுடெல்லி: டெல்லியின் ஷதரா மாவட்டம் பஜன்புராவின் கோகல்புரி கிராமத்தில், 4வது மாடியில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வரும் கட்டிடத்தில் தனியார் கோச்சிங் சென்டர் இயங்கி வருகிறது. 15 வயதுக்கு உட்பட்ட 30க்கும்  அதிகமான சிறுவர், சிறுமியருக்கு அங்கு படித்து வருகின்றனர். கட்டிடத்தின் விரிவாக்க பணிகள் நடைபெற்ற மாடியின் கூரை ஒட்டுமொத்தமாக நேற்று மாலை இடிந்து விழுந்தது. இதில் 30க்கும் அதிகமான மாணவர்கள் சிக்கினார்கள்.  தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டு 4 மாணவர்கள் உள்பட 5 பேர் சடலமாக மீட்டனர். மேலும் 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சையில் சேர்க்கப்பட்டனர். மூன்று சிறுவர்கள் கதி என்ன என்பது நேற்றிரவு  வரை தெரியவில்லை.

Tags : collapses ,Delhi ,building collapse , 5 collapses in Delhi building collapse
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...