×

தர்மபுரியில் சாலையில் கிடந்த போலீஸ் தொப்பி

தர்மபுரி: தர்மபுரி-சேலம் மெயின்ரோட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி முன், தமிழக அரசின் முத்திரை பொறிக்கப்பட்ட போலீஸ் தொப்பி ஒன்று சாலையில் கிடந்தது. அதன் மீது அவ்வழியே சென்ற வாகனங்கள் ஏறி சென்றன. அத்தனை வாகனங்கள் ஏறி சென்ற போதிலும் தொப்பில் இருந்த அரசு முத்திரை மட்டும் சேதமடையாமல் இருந்தது.  இதனை பார்த்த அவ்வழியே வந்த நபர் ஒருவர் தொப்பியை எடுத்து சாலையில் அருகில் இருந்த ஒரு கல் மீது வைத்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த சாலையில் நேற்று மாலை டூவீலரில் போலீஸ்காரர் ஒருவர் சென்றார்.

அவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் தொப்பியை டூவீலரின் முன்பகுதியில் வைத்திருந்தார். இந்த தொப்பி தவறி சாலையில் விழுந்தது. இதனை அவர் எடுக்க முயன்ற போது, பின்னால் வந்த வாகனங்கள் வரிசையாக தொப்பியின் மீது ஏறியது. இதில் தொப்பி தேசமடைந்தது. இதனால் அந்த போலீஸ்காரர் தொப்பில் இருந்த அரசு சின்னத்தை எடுக்காமல் தொப்பியை அப்படியே சாலையில் போட்டு சென்றுவிட்டார். இது தமிழக அரசை அவமதிக்கும் நோக்கில் அமைந்துள்ளது, என்றனர்.

Tags : road ,Dharmapuri , Dharmapuri, police cap
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி