×

விவசாயி என்று கூறும் முதல்வர் டெல்டாவை பாதுகாக்கட்டும்: அன்புமணி வலியுறுத்தல்

வாலாஜா: ‘‘தன்னை விவசாயி என்று கூறிக்கொள்ளும் முதல்வர், காவேரி டெல்டாவை பாதுகாக்க, பாதுகாப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்’’ என்று அன்புமணி வலியுறுத்தினார். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, நீர்மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும். மத்திய அரசிடம் ஒரு லட்சம் கோடி நிதி கேட்டு பெற வேண்டும். பெரியார் குறித்து சர்ச்சை கருத்துக்களை ரஜினி தவிர்த்திருக்க வேண்டும். நாங்கள்கூட பெரியார் கொள்கையை பின்பற்றி கட்சி நடத்துகிறோம். காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை 5வது உரிமத்திற்காக விளம்பரம் வெளியிட்டுள்ளது. இதனை பாமக வன்மையாக கண்டிக்கிறது. தன்னை விவசாயி என்று கூறிக்கொள்ளும் முதல்வர், காவிரி டெல்டாவை பாதுகாக்க, பாதுகாப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Delta ,Anmani , Farmer, Chief Minister, Delta, Preserve, Dearmani
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை