×

புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையராக பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் புதுவை அரசு மனு விசாரணைக்கு ஏற்பு

சென்னை: புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையராக பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் புதுவை அரசு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையராக பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டது செல்லாது என்று துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டார். துணை நிலை ஆளுநர் உத்தரவை ரத்து செய்ய கோரி புதுச்சேரி உள்ளாட்சித்துறை அமைச்சர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். புதுச்சேரி உள்ளாட்சித்துறை அமைச்சர் மனு விசாரணைக்கு உகந்தது என்று கூறி பட்டியலிடுமாறு பதிவாளருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 


Tags : Puducherry State ,Election Commissioner State Government ,Plea Hearing ,Pondicherry , Puducherry State Election Commissioner, Balakrishnan
× RELATED ஓட்டுக்கு ரூ.500, ரூ.1000 கன்டெய்னரில பணம் பாஜ கொண்டு வந்துருக்கு… அதிமுக பகீர்