மதுரை: மதுரை - உசிலம்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட அகல பாதையில் முதல்கட்டமாக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்டம் ரயில் மதுரையில் இருந்து உசிலம்பட்டிக்கு வந்து சேர்ந்தது. தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையிலான குழு ரயிலை இயக்கி சோதனை செய்தது. மதுரை - உசிலம்பட்டி இடையே 37 கிலோ மீட்டர் தூரத்துக்கு அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.