சென்னை: விதிகளை மீறி கடந்த ஆண்டு நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடந்தது. தபால் ஓட்டு யாருக்கும் வந்து சேரவே இல்லை என நடிகர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார். புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். நடைபெற உள்ள நடிகர் சங்க தேர்தல் நியாயமாக நடைபெறும் என நம்பிக்கை உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். இயக்குனர் பாக்யராஜ், நடிகர் ஐசரி கணேஷ் கூட்டாக சென்னையில் பேட்டியளித்தனர். இவ்வகையில் நடிகர் சங்க தேர்தல் வழக்கு தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்துள்ளனர்.