×

தந்தை பெரியார் குறித்து ரஜினி கருத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு: தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பரப்பியதாக ரஜினிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த ஜனவரி 14ம் தேதி சென்னையில் நடந்த துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணி ஒன்றில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்களை எடுத்துச்சென்றதாகவும், செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும் பேசினார். துக்ளக் பத்திரிகை பொன் விழாவில் பெரியார் பற்றி ரஜினிகாந்த் பேசியதற்கு  எதிராக அவர் மீது திக சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டன.  

சென்னை திருவல்லிக்கேணி மற்றும் கோவை காட்டூர் காவல் நிலையங்களில் கொடுத்த புகார் மீது வழக்கு பதியக்கோரி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ராஜமாணிக்கம் அமர்வு முன்று இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது; புகார் கொடுத்த 15 நாட்கள் முடிவதற்குள் முன்னதாகவே நீதிமன்றத்தை அணுகியது ஏன்..? என நீதிபதி கேள்வி எழுப்பினார். புகார் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு கால அவகாசம் வழங்கிய பின் நீதிமன்றத்தை மனுதாரர்கள் அணுகி இருக்க வேண்டும்.

இந்த மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடபட்டதே தவறு என்றும் நீதிபதி கூறினர். இதனையடுத்து இந்த மனுக்கள் வாபஸ் பெற்றதை தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டது. தந்தை பெரியாரின் சீர்திருத்த கொள்கைகள் மிக முக்கியமானவை; பெரியார் மிகப்பெரிய தலைவர்; அவர்களின் கொள்கைகள் மறுக்க முடியாது; சட்ட விதிகளுக்கு உட்பட்டே நீதிமன்றம் செயல்பட முடியும் எனவும் நீதிபதி ராஜமாணிக்கம் கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : Periyar ,Rajini ,Icort , Father Periyar, Rajini Comment, Discount, Icort
× RELATED முல்லைப் பெரியாறில் வாகன...