சென்னை: சென்னை தேனாம்பேட்டை காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் வைரமுத்து (38). இவர், சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவரின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு பெயர் வைப்பதில் மனைவிக்கும் வைரமுத்துவுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த வைரமுத்து நேற்று முன்தினம் பணி முடிந்து வந்துள்ளார். பிறகு அறைக்குள் சென்றவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அறையை உடைத்து பார்த்த போது வைரமுத்து மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.