×

பொக்லைன் திருடிய 3 வாலிபர்கள் சிக்கினர்

அம்பத்தூர்: அம்பத்தூர், கள்ளிக்குப்பம், காந்திநகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (28). பொக்லைன் வைத்து தொழில் செய்கிறார். கடந்த 19ம் தேதி ராஜீவ்காந்தி வேலை முடிந்து பொக்லைன் இயந்திரத்தை அம்பத்தூர்-செங்குன்றம் நெடுஞ்சாலை, பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தி வைத்திருந்தார்.  மறுநாள் வந்து பார்த்தபோது பொக்லைனை மர்ம நபர்கள் கடத்தியது தெரிய வந்தது. புகாரின்பேரில் அம்பத்தூர் உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் பெரியதுரை தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து 35க்கு மேற்பட்ட கண்காணிப்பு கேமரா உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பொக்லைனை கடத்தியது பாடியநல்லூரை சேர்ந்த கார்த்திக் (30), திருத்தணியை சேர்ந்த ராம்ராஜ் (20), ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த கேசவலு (28) ஆகியோர் என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் நேற்று கைது செய்து ஆந்திரா மாநிலம், தடா பகுதியில் மறைத்து வைத்திருந்த பொக்லைன் இந்திரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி  புழல் சிறையில் அடைத்தனர்.


Tags : Plaintiffs , poklain
× RELATED திருமண தகவல் மையம் மூலம் பெண்களை...