×

பராமரிப்பு பணிகள் காரணமாக மூர்மார்க்கெட்டில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் ரத்து : தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக மூர்மார்க்கெட்டில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: மூர்மார்கெட்-திருவள்ளூர் இடையே இரவு 11.15 மணிக்கும், மூர்மார்க்கெட்-ஆவடி இடையே 11.35 மணிக்கு இயக்கப்படும் ரயில் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் மூர்மார்க்கெட்- ஆவடி இடையே இரவு 10.10 மணிக்கு இன்று மற்றும் நாளையும் இயக்கப்படுகிறது. மேலும், மூர்மார்க்கெட்- திருவள்ளூர் இடையே இரவு 12.05 மணிக்கும், மூர்மார்க்கெட்- ஆவடி இடையே  இரவு 12.15 மணிக்கும், சென்னை கடற்கரை- அரக்கோணம் இடையே இரவு 1.20 மணிக்கும் 25, 26ம் தேதிகளில் இயக்கப்படும் ரயில் ஒரு சில ரயில்நிலையங்களில் நிற்காமல் செல்லும்.

Tags : Southern Railway ,cancellation ,Moormarket Southern Railway , Southern Railway announces, cancellation of trains , Moormarket
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு 19 சிறப்பு...