×

கிராம சபை கூட்டத்தில் மக்கள் நலன் சார்ந்த தீர்மானங்கள் : எஸ்.டி.பி.ஐ. கட்சி வேண்டுகோள்

சென்னை: எஸ்.டி.பி.ஐ.கட்சி மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்ட அறிக்கை: குடியரசு நாளில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அனைத்து கிளைகளிலும் தேசிய கொடியை ஏற்றுவதோடு, குடியரசின் மாண்புகளை பாதுகாத்திடவும், மக்களாட்சி ஜனநாயகத்தையும், தேசத்தின் அரசியல் அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்கவும் உறுதிமொழி ஏற்க வேண்டும். மேலும், குடியரசு தினத்தன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் கலந்துகொண்டு அப்பகுதி நலன் சார்ந்த தீர்மானங்களை நிறைவேற்றவும், கிராம சபை கூட்டங்களுக்கான அறிவிப்பு வராத பகுதிகளில் அந்த கூட்டங்களை நடத்துவதற்கான முயற்சிகளையும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும்.

Tags : Village Council Meeting ,SDBI , People's Welfare Decisions , Village Council Meeting,SDBI Party Request
× RELATED விருதுநகரில் விஜயகாந்த் மகன்...