×

தஞ்சை பெரிய கோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும் : ராமதாஸ் டிவிட்டரில் கருத்து

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டர் பதிவு: தஞ்சாவூர் கோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதே. ஆகம விதிகள் இந்த கோரிக்கைக்கு எதிராக இல்லை. எனவே, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து தஞ்சை பெரிய கோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். சிவபெருமான் தமிழ்நாட்டில் தான் 64 திருவிளையாடல்களை நிகழ்த்தியதாகவும், அனைத்து  நிகழ்வுகளிலும் தமிழிலேயே உரையாடியதாகவும் சிவனடியார்கள் கூறுகின்றனர். அவர்களின் நம்பிக்கையை மதித்து தமிழில் குடமுழுக்கு செய்வது தானே சரியான செயலாக இருக்க முடியும்.

Tags : Ramadas ,Tanjay , Tamil , Tanjay big temple
× RELATED ஓவர் கான்பிடன்ஸ் வேணாம்..! தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்