சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே குமராபுரம் முத்தயம்பட்டி கிராமத்தில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயி போராட்டம் நடத்தி வருகிறார். ஆனந்தன் என்ற விவசாயி தனது விளைநிலத்துக்கு அருகே உள்ள உயர்மின் அழுத்த கோபுரம் மீது ஏறி முழக்கமிட்டு வருகிறார்.