திருவனந்தபுரம்: கேரளாவில் முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.பாபு. ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் அவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்த சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதில் 2001 முதல் 2016 வரையில், 49.45 சதவீதம் அதிக சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இவரிடம் கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.