புதுடெல்லி: மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் நேற்று அளித்த பேட்டி: நாட்டின் பொருளாதாரம் இப்போதும் வலுவான நிலையிலேயே உள்ளது. பொருளாதார நிலையை உயர்த்தும் நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சரவை ஆலோசனை நடத்தி வருகிறது. இதை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் பொருளாதாரத்தை அதிகரிக்க செய்யும் செயல் திட்டம் இடம் பெறும். தேசிய மக்கள்தொகை பதிவு நடவடிக்கை காங்கிரஸ் தலைமையிலான அரசு மத்தியில் ஆண்டபோதும் மேற்கொள்ளப்பட்டது. அதை வரவேற்றவர்கள், தற்போது பாஜ.வின் நடவடிக்கையை மோசமானது என்கின்றனர் என குற்றஞ்சாட்டினார்.