×

ரவுடி கொலையில் மேலும் 8 பேர் கைது: 5 அரிவாள், 2 ஆட்டோ பறிமுதல்

சென்னை: முன்விரோதம் காரணமாக ரவுடியை ஆட்டோவில் கடத்தில் கொலை செய்து உடலை வீசிய விவகாரத்தில், தலைமறைவாக இருந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை திருவல்லிக்கேணி பி.பி.குளம் 2வது தெருவை சேர்ந்தவர் ராம்குமார் (24). ரவுடி. இவர் மீது, மயிலாப்பூர், ஐஸ்அவுஸ் காவல் நிலையங்களில் திருட்டு மற்றும் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஏ.சி. மெக்கானிக்கான ராம்குமார் கடந்த 15ம் தேதி பொங்கல் பண்டிகையின்போது ஏற்பட்ட தகராறில் அதே பகுதியை சேர்ந்த பிரேம்குமாரை பீர் பாட்டிலால் கழுத்தில் குத்தினார். இந்த வழக்கில் ராம்குமார் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

இதற்கிடையே புகாரளித்தும் ராம்குமாரை போலீசார் பிடிக்காததால் ஆத்திரமடைந்த பிரேம்குமார் தனது நண்பர்களான திருவல்லிக்கேணி நடுக்குப்பத்தை சேர்ந்த அப்பு (24), ஆட்டோ டிரைவர் சிவமணி (24), அப்துல் ரஹிம் (24), அஸ்மத் (23), சுபான் (22), கார்த்திக் (25), ரஞ்சித் (22), வினோத் (24), ஜெகன் (29), அருண் (30) ஆகிய 10 பேருடன் சேர்ந்த கடந்த 19ம் தேதி இரவு மயிலாப்பூர் நடேசன் சாலையில் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த ராம்குமாரை ஆட்டோவில் கடத்தி சென்றனர். பின்னர் நடுக்குப்பம் பகுதி கழிவறையில் வைத்து கொடூரமாக வெட்டி கொலை செய்தனர்.

பின்னர் உடலை ஆட்டோவில் எடுத்து சென்று சென்னை அருகே உள்ள கோவளம் கடலோர காவல் படை காவல் நிலையம் பின்புறம் உள்ள கல்குட்டையில் வீசினர். இந்த கொலை குறித்து ஐஸ்அவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 20ம் தேதி ஆட்டோ டிரைவர் அருண், அப்பு, ஜெகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகளான பிரேம்குமார், சிவமணி, அப்துல் ரஹிம், அஸ்மத், சுபான், கார்த்திக், ரஞ்சித், வினோத் ஆகிய 8 பேரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை குற்றவாளிகளின் செல்போன் எண்ணின் சிக்னலை வைத்து 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 அரிவாள் மற்றும் 2 ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்பட்டது.


Tags : murder ,Rowdy ,murders , Rowdy murder, 8 people arrested, 5 sickle, 2 auto, confiscated
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...