×

மாமல்லபுரத்தை அழகுப்படுத்தும் வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மாமல்லபுரத்தை அழகுப்படுத்துவதற்கு தேவைப்படும் நிதி குறித்து விவாதித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய மற்றும் மாநில அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மாமல்லபுரத்தை அழகு படுத்துவது தொடர்பாக நீதிபதி கிருபாகரன் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதி கிருபாகரன் கடிதத்தின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்றைய விசாரணையின் போது யுனெஸ்கோவால் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள மாமல்லபுரத்தை அழகுபடுத்த மத்திய அரசு தான் நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தேவைப்படும் நிதி மற்றும் மத்திய - மாநில அரசுகளின் பங்களிப்பு குறித்து, தமிழக அரசின் பல்வேறு துறை செயலாளர்களும், மத்திய தொல்லியல் துறை இயக்குனரும் விவாதித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 25-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 


Tags : Central ,Mamallapuram The High Court ,Mahabalipuram ,State Government , Central, state government ,order ,beautification,Mamallapuram
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...