×

மாநில அளவில் சிறந்த காவல் நிலையமாக டவுன் ஸ்டேஷன் தேர்வு: முதல்வரிடம் விருது பெறுகிறார் இன்ஸ்பெக்டர்

தர்மபுரி: தர்மபுரி டவுன் காவல் நிலையம் மாநில அளவில் 3வது சிறந்த காவல் நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்ட காவல்துறை 3 சப்-டிவிஷன்களாக பிரிக்கப்பட்டுள்ளன. தர்மபுரி டிவிஷனில் தர்மபுரி, அதியமான்கோட்டை, தொப்பூர், மதிகோண்பாளையம், காரிமங்கலம், கிருஷ்ணாபுரம் என 6 போலீஸ் ஸ்டேஷன்களும், அரூர் சப் டிவிஷனில் அரூர், கோட்டப்பட்டி, ஏ.பள்ளிப்பட்டி, பாப்பிரெட்டிபட்டி, பொம்மிடி, கடத்தூர், கம்பைநல்லூர், மொரப்பூர் என 8 போலீஸ் ஸ்டேஷன்களும், பென்னாகரம் சப்-டிவிஷனில் பென்னகாரம், ஏரியூர், இண்டூர், பெரும்பாலை, ஒகேனக்கல், மாரண்டஅள்ளி, பாலக்கோடு, மகேந்திரமங்கலம், பஞ்சப்பள்ளி என 10 போலீஸ் ஸ்டேஷன்களும் உள்ளன. இது தவிர 3 சப்-டிவிஷன்களிலும் ஒரு மகளிர் போலீஸ் ஸ்டேசன்களுமாக 27 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இதில் 900க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றுகின்றனர்.

 தர்மபுரி போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக ரத்னகுமார், 4 எஸ்ஐக்கள், 80 போலீசார் பணியாற்றுகின்றனர். ந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் செயல்பாடுகளின் அடிப்படையில் சிறந்த காவல் நிலையங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் தமிழகத்தில் 3வது சிறந்த காவல் நிலையமாக தர்மபுரி டவுன் காவல் நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துபோலீசார் கூறும்போது, காவல் நிலையங்களில் செய்யப்படும் வழக்குப்பதிவுகள், குற்றவாளிகளை கண்டுபிடித்தல், அனைத்து பதிவுகளுக்கும் கணினியை பயன்படுத்துதல், எதிரிகளை கைது செய்தல், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது எண்ணிக்கை, குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்களை கைது செய்தது, கொலை குற்றங்களை விரைந்து கண்டுபிடித்தல், சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்குகளை விரைந்து முடித்தல், காவல்நிலையத்தின் சுற்றுச்சூழல், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் மேம்பாடு, பதிவேடுகளை சீரிய முறையில் பராமரித்தல் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் தர்மபுரி டவுன் காவல் நிலையம் 3வது இடத்தை பிடித்துள்ளது. வரும் 26ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் டவுன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரத்னகுமார் விருதை பெற உள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

Tags : Town Inspector of the Year , Town Inspector,Year, Best, Inspector
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை