×

வருமான வரித்துறை விசாரணைக்கு நடிகை ரஷ்மிகா குடும்பத்துடன் ஆஜர்: மூன்று மணி நேரம் விசாரணை

மைசூரு:  வருமானவரி துறையினர் அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க,  நடிகை ரஷ்மிகா குடும்பத்தோடு மைசூருவில் உள்ள வருமானவரி துறை  அலுவலகத்துக்கு நேரில் வந்து அதிகாரிகள் முன் ஆஜரானார். அப்போது அவரிடம்  அதிகாரிகள் சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.தமிழ், கன்னடம் உள்பட பலமொழி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரஷ்மிகா. கர்நாடகாவில் குடகு  மாவட்டம் வீராஜ்பேட்டையில் உள்ள இவரது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்  வருமானவரி துறை அதிகாரிகள் திடீர் என்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது  அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் வைத்திருந்த கோடிக்கணக்கான  சொத்துக்களுக்கான  ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த  சோதனையின்போது நடிகை ரஷ்மிகா வீட்டில் இல்லை. வெளியே சென்று இருந்தார்.  இதனால் சொத்துக்கள் குறித்து வருமான வரித்துறை அலுவலகத்துக்கு நேரில் வந்து  விளக்கம் அளிக்க வேண்டும் என்று வருமானவரி துறையினர் அவருக்கு நோட்டீஸ்  அனுப்பி வைத்தனர். அதிகாரிகள் அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கம்  அளிக்க நடிகை ரஷ்மிகா தனது தந்தை மதன் மந்தண்ணா, தாய் சுமன் உட்பட 9 பேர்  மைசூரு நஜர்பாத் சாலையில் உள்ள வருமானவரி துறை அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள்  தங்களுடன் இரண்டு பேக், ஒரு பைல் (கோப்பு), ஒரு கிட் ஆகியவற்றை எடுத்து  வந்தனர். இவர்களிடம் வருமானவரி துறை கமிஷனர் சஞ்சய்காந்தி தலைமையிலான  அதிகாரிகள் சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்த  பின் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.



Tags : Actress Rashmika ,Income tax department investigation , Department of Income Tax
× RELATED இந்தோனேஷியாவில் பலமுறை வெடித்து சிதறிய எரிமலை