×

வெம்பக்கோட்டை பகுதியில் பருத்தி விளைச்சல் அமோகம்

சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றிய பகுதியில் மானாவாரி நிலங்களில் பருத்தி விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை சரிவர பெய்யவில்லை. வெம்பக்கோட்டை வட்டாரத்தில் 8 ஆயிரம் ஹெக்டேர் பரப்பு மானாவாரி நிலங்களில் விவசாய பணிகள் மந்த கதியில் நடைபெற்றன. குறுகிய கால பயிர்களான சோளம், கம்பு போன்ற பயிர்களை மட்டுமே விவசாயிகள் பயிரிட்டனர்.   

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஆரம்பம் முதலே பரவலாக பெய்து வந்தது. வெம்பக்கோட்டை வட்டார பகுதி விவசாயிகள் மனாவாரி நிலங்களில் பருத்தி சாகுபடி செய்தனர். ஆயிரம் ஏக்கர் பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டது. அவ்வப்போது மழை பெய்ததால் பருத்தி விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குகன்பாறை கிராமத்தை சேர்ந்த விவசாயி மலையரசன் கூறுகையில், ‘மானாவாரி நிலங்களில் பருத்தி சாகுபடி பணியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஈடுபட்டோம்.

பருவமழை பரவலாக பெய்ததால் பருத்தி செடிகள்  நன்கு வளர்ந்து விளைச்சல் அமோகமாக உள்ளது. ஒரு சில நிலங்களில் மட்டுமே பனி மூட்டம் காரணமாக விளைச்சல்  பாதிப்படைந்துள்ளது. தற்போது செடிகளில் இருந்து பருத்தி பஞ்சுகளை சேகரித்து வருகிறோம்’ என்றார்.

Tags : Cotton Yield ,área , Vembakottai, Algodón
× RELATED நோய் தாக்குதலால் பருத்தி மகசூல் பாதிப்பு