வத்தலக்குண்டு: வத்தலக்குண்டுவில் பலமாக காற்று அடித்தால் ஒடிந்து விடும் நிலையில் மின்கம்பம் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு ஸ்டேட் பேங்க் காலனி பகுதியிலிருந்து பைபாஸ் ரோடு செல்லும் மண் சாலையில் மின் கம்பம் ஒன்று உள்ளது. அந்த மின்கம்பம் மிகவும் சரிந்த நிலையில், அதன் அடிப்பகுதி ஏற்கனவே ஒடிந்து இப்ப விழுமோ, எப்ப விழுமோ என்ற நிலையில் உள்ளது.
இப்பகுதியில் வசிப்பவர்கள் பைபாஸ் சாலைக்கு செல்வதற்கு குறுக்கு வழி சாலையாக பயன்படுத்தி வருகிறார்கள். எனவே எப்போதும் ஆள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். பலத்த காற்று அடித்தால் ஒடிந்து விழும் நிலையில் மின்கம்பம் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி சமூக ஆர்வலர் பாக்யராஜ் கூறுகையில், மின்கம்பம் ஒடிந்து விழும் மோசமான நிலையில் இருப்பது பற்றி பலமுறை மின்வதரியத்திற்கு புகார் செய்தும் பலனில்லை. எனவே உடனடியாக மின்கம்பத்தை மாற்ற மின்வாரிய உயரதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.