×

படுமோசமாக உள்ளதால் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத அரசு பஸ்கள்: அச்சத்தில் பயணிகள்

பரமக்குடி:  பரமக்குடி பணிமனைகளில் இயக்கப்படும் பேருந்துகள் படுமோசமாக உள்ளதால், பயணம் செய்யும் பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர். பரமக்குடி நகரின் வளர்ச்சிகள் முழுவதும் அதனை சுற்றியுள்ள கிராமத்தின் அடிப்படையாக கொண்டுதான் இயங்கி வருகிறது. தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகளில் வந்து செல்கின்றனர். ஆனால், பரமக்குடியை சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு இன்னும் அரசு நகர் பேருந்து வசதிகள் இல்லாமல் உள்ளது. அதுபோல் இயக்கப்படும் அரசு பேருந்துகள் படுமோசமாக உள்ளன. பேருந்துகளில் உள்ள கண்ணாடிகள் உடைந்து பாதுகாப்பு இல்லாத சூழல் உருகியுள்ளது. பயணிகள் அமரக் கூடிய இருக்கைகள் ஆட்டம் கண்டு விட்டது. மேடு பள்ளத்தில் ஏறி இறங்கும் போது, பயணிகள் தூக்கி வீசப்படுகின்றனர். இதுதவிர டீசலை சிக்கனப்படுத்த வேகத்தை குறைத்து செல்கின்றனர்.

ஆனால் ஒரு வேளை வேகத்தை அதிகப்படுத்தினால், பயணிகள் யாரும் இருக்கையில் உட்கார முடியாத நிலையில் இருக்கைகள் மற்றும் பஸ்கள் சேதமடைந்து உள்ளது. இதனால் பயணிகள் அரசு பேருந்துகளில் செல்லவே அச்சப்படுகின்றனர். அதுபோல் கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகளில் சரியான அளவில் பிரேக் இல்லாததால், அதிகளவில் விபத்து நடப்பதாக பேருந்து ஓட்டுனர்களே சொல்லுவது, பொதுமக்களிடம் கடும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கிராம சாலைகள் வளைத்து நெளித்து செல்வதாகவும், மேடு பள்ளமாகவும் உள்ளதால், கிராமங்களுக்கு செல்லும் நகர் பேருந்தகள் சேதமடைந்த பகுதிகளை மாற்றி, முறையான பராமரிப்புடன் இயக்க வேண்டும் என பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து பாண்டியூர் ராமசாமி கூறுகையில், அரசு பஸ்களில் பயணம் செய்வது  உயிருக்கு பாதுகாப்பு இல்லாமல் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. எந்த நேரத்தில் உடைந்து விழும் என்ற பயத்தில் பயணம் செய்யவதால், பேருந்தைவிட்டு இறங்கும் வரை உயிரை கையில் பிடித்து கொண்டு பயணம் செய்ய வேண்டியுள்ளது. போக்குவரத்து அதிகாரிகள் இதுபோன்ற பேருந்துகளை இயக்காமல் இருப்பது நல்லது என கூறினர்.

Tags : passengers , State-run,life-threatening , bad weather,passengers in fear
× RELATED கள்ளக்குறிச்சியில் நின்று...