×

பராமரிப்பு பணிக்காக நாளை முதல் சேலம்-கோவை பாசஞ்சர் ரயில் 70 நாட்களுக்கு ஒரு பகுதி ரத்து: தினமும் ஈரோட்டில் இருந்து புறப்படும்

சேலம்: தண்டவாள பராமரிப்பு பணிக்காக நாளை முதல் சேலம்-கோவை பாசஞ்சர் ரயில்,  70 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட வீரபாண்டி-சேலம் இடைப்பட்ட பகுதியில் நாளை (22ம் தேதி) முதல் இரண்டரை மாதத்திற்கு தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால், இம்மார்க்கத்தில் இயங்கும் சேலம்-கோவை பாசஞ்சர் ரயில் (66603), நாளை (22ம் தேதி) முதல் மார்ச் 31ம் தேதி வரை 70 நாட்களுக்கு ஒரு பகுதியாக சேலம்-ஈரோடு இடையே ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கத்தில் கோவை-சேலம் பாசஞ்சர் ரயில் (66603), நாளை முதல் 70 நாட்களுக்கு ஈரோடு-சேலம் இடையே ஒரு பகுதி ரத்து செய்யப்படுகிறது. இதே போல 70 நாட்களுக்கு (ஞாயிறு தவிர) ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் (13352), மகுடஞ்சாவடியில் 15 நிமிடம் நின்று தாமதமாக இயக்கப்படும். இதேபோல், திருப்பூர்-வஞ்சிப்பாளையம் பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணி நடப்பதால், சேலம்-கோவை பாசஞ்சர், இன்று (21ம் தேதி) முதல் பிப்ரவரி 10ம் தேதி வரையில் ஈரோட்டில் இருந்து 45 நிமிடம் தாமதமாகவும், கோவை-பாலக்காடு பாசஞ்சர் (66607), கோவையில் வரும் 10ம் தேதி வரை 70 நிமிடம் தாமதமாகவும் இயக்கப்படும். இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Tags : passenger train ,Coimbatore ,Salem ,cancellation ,departure ,Erode , Salem-Coimbatore, passenger train, departure ,Erode daily
× RELATED கண்ணூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில்...