×

சீனாவில் வேகமாக பரவும் கரோனா வைரஸின் தாக்குதல் குறித்து மாநில தலைமை செயலாளர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் பிரீத்தி சூடன் கடிதம்

டெல்லி: சீனாவில் மீண்டும் பரவி வரும் கரோனா வைரஸால் நூற்றுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதனால் சீனாவில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகள் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்த நிலையில் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பிரீத்தி சூடன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கரோனா வைரஸின் தாக்கம் குறித்து சுகாதாரத்துறை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். நோயின் தாக்கம் குறித்தும், அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்திற்கு பிரீத்தி சூடன் கடிதம்:

இதனை தொடர்ந்து, இந்தியா முழுவதும் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கரோனா வைரஸ் பாதிப்புடன் வருபவர்களை கண்காணிக்க வேண்டும் என்று விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்திற்கு பிரீத்தி சூடன் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கொச்சி விமான நிலையங்களுக்கு வரும் சீனர்களை தீவிரமாக கண்காணிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும் சீன பயணிகளை தெர்மல் ஸ்கிரீன் மூலம் சோதனையிட வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

கரோனா வைரஸ் என்றால் என்ன?

முன்னதாக கரோனா வைரஸ் என்பது பாலூட்டி விலங்குகள் மற்றும் பறவைகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு வகையான நோய் தொற்றாகும். இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இருமல், மூச்சு காற்று, சளி, ரத்தம் மூலமாக பிறருக்கும் அந்த பாதிப்பு பரவ வாய்ப்புள்ளது. ஒருவேளை அந்த நோய்க்கு உரிய சிகிச்சை மேற்கொள்ளாத பட்சத்தில் தீவிர சுவாச பிரச்சனைகள் ஏற்பட்டு உயிரிழப்பும் நேரிட கூடும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தான் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் இருந்தது. அப்போது அந்த வைரஸ் தாக்கத்திற்கு ஆளாகி நூற்றுக்கணக்கானோர் அங்கு உயிரிழந்தனர். தற்போது மீண்டும் அந்த வைரஸ் தலைதூக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Preeti Sudan ,state secretaries ,attack ,China ,State ,Secretary General , China, Coronavirus, Secretary of State, Health Secretary Preeti Sudan, Letter
× RELATED போராட்டம் நடத்த இருந்த நிலையில்...