×

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை:  பாரிமுனை வடக்கு கடற்கரை சாலையில் வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். இதில், தனியார் மயமாக்கல், பொருளாதார கொள்கையை கண்டித்தும்,  ஊதிய உயர்வு, குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்தல் உட்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷமிட்டனர்.


Tags : Bank employees , Bank employees, demonstrate
× RELATED பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...