×

சோழவரம் ஏரியில் குளிக்க சென்ற வாலிபர் சேற்றில் சிக்கி சாவு

புழல்: சோழவரம் ஏரியில் குளிக்கச் சென்ற வாலிபர் சேற்றுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். வில்லிவாக்கம் அடுத்த ராஜமங்கலம், ராஜாஜி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் ஜெகதீஷ் (20). இவர், ஒரு தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை தனது 7 நண்பர்களுடன் சோழவரம் ஏரியில் குளிக்க சென்றார். அப்போது ஜெகதீஷுக்கு நீச்சல் தெரியாததால், அங்குள்ள சேற்றில் சிக்கி நீருக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து, தகவலறிந்ததும் சோழவரம் போலீசாரும், செங்குன்றம் தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். அங்கு சேற்றுக்குள் சிக்கி பலியான ஜெகதீஷின் சடலத்தை நேற்று முன்தினம் இரவு முதல் தீயணைப்பு படையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை 11.30 மணியளவில் ஜெகதீஷின் சடலத்தை தீயணைப்பு படையினர் மீட்டனர். பின்னர் அவரது சடலத்தை போலீசார் கைப்பற்றி, பொன்னேரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புகாரின்பேரில் சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : lake ,Cholavaram , Cholavaram lake, bath, youth, death
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு